Friday, September 26, 2008

நான் யார்?

தடுமாறும்
ஒரு மரமா?
தவிக்கும்
ஒரு இலையா?
கய்ந்த
ஒரு சருகா?
வாடிய
ஒரு பூவா?
உடைந்த
ஒரு கிளையா?
நாளைய
அடுப்பில் விரகா?
ஆற்றில் மிதப்பா?
வீட்டில் கட்டிலா?

வேதனையின் விளிம்பில்
வெறுப்பின் உச்சத்தில்
தவறுகளின் பார்வையில்
நான் யார்?
நான் யார்?

வரவுகளின் தேவையில்
செலவுகளின் தேவையில்
உறவுகளின் தேவையில்
நரம்புகளின் தேவையில்
நான் யார்?
எனது நான் யார்?

மதங்களின் பார்வையில்
பிற மனிதர்களின் பார்வையில்
இனங்களின் பார்வையில்
மனங்களின் பார்வையில்
நான் யார்?

வித்தா ? பூவா? காயா?கனியா?மரமா? சருகா?
நானறியேன்.

2 comments:

nithiy said...

nice one....

Dakshan2004 said...

Back to my own blog after a decade. Hope to write more on several matters...